அன்புடன் எம்மண்ணின் உறவுகளே,யாழ், முஸ்லிம் சமூகத்திற்குள் ஆயிரம் முரண்பாடுகள் இருக்கலாம், அல்லது இருக்கின்றது என்பது ஒரு கசப்பான உண்மையே. அரசியல் ரீதியான, இஸ்லாமிய அமைப்புக்கள் ரீதியான, மற்றும் பல கொள்கைகள் ரீதியான வேறுபாடுகள் நம்மை முரண்படவைத்துள்ளன. ஆனால் இவவேறுபாடுகளுக்கும் அப்பால் நம்மையேல்லாம் யாழ் முஸ்லிம் என்னும் ஒரு சகோதர உறவு ,ஒரு சமூகஉறவு நம் உள்ளங்களை ஏதோ ஒரு உணர்வோடு நாடுகின்றது,அல்லது தேடுகின்றது அப்படியானால் நாம் ஏன் இந்த முரண்படுகளுக்கப்பால் ஒரு சில செயற்திட்டங்களுக்காக ஒற்றுமைப்படக்கூடாது. ஒருவருக்கொருவர் சந்தேகமும், இவர் இதைச்செய்வதா என்ற உளப்பாங்கும் நமது சமுதாயத்தை சீரழிக்கின்றது. என்பதை உணருங்கள்.
சிதைக்கப்பட்ட ஒரு சமுதாயத்தின் சின்னம் ### இலக்கு நோக்கிய பயணத்தின் ஓர் ஆரம்பம்...
Saturday, September 29, 2012
Thursday, May 31, 2012
யாழ் முஸ்லிம் இணையத்தளத்தின் மகத்தான பணி...!
விடுதலை என்ற பெயரில் அடுத்த சிறுபான்மையை இனசுத்திகரிப்பு செய்த கொடிய வரலாற்று நிகழ்வை ஒரு ஆவணமாக காண்பதையிட்டு உவகையடைகின்றோம். அப்துல் ரஹீம், ஹஸ்புல்லாஹ், மொஹிதீன் போன்றவர்கள் இதனை அச்சாக கொண்டு வந்த போதிலும் அவற்றிற்கான முகவரியும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை. அல்லது கிடைக்காமலாக்கப்பட்டது.
இப்போது அந்த தடைகளையெல்லாம் தாண்டி அந்த அகதி மண்ணின் மைந்தர்களினாலேயே அவை ஆவணமயப்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் இலக்கிய ஆவணமாக. இந்த மகத்தான பணியை செய்த யாழ் முஸ்லிம் இணையத்தளத்திற்கு இந்த வேளையில் நாம் நன்றி கூறுகின்றோம். அவர்களின் முயற்ச்சி முழுதாக வெற்றிபெற நாம் அந்த கவிதை புத்தகத்தை வாங்கி படித்து, பிறரிற்கும் கொடுத்துதவ வேண்டுமென்று ஆசைப்படுகின்றோம். நன்றி.
Saturday, May 26, 2012
கூகிள் எர்த் நமக்கு காட்ட மறுக்கும் பிரதேசங்கள்
கூகிள் எர்த் மூலம் நாம் உலகின் எந்தப்பகுதியையும் பார்க்கமுடியும் ..நாடுகள்,நகரங்களில் உள்ள வைத்திய சாலைகள் ,நூலகங்கள் ,போலீஸ்நிலையம் ,வீதிகளின் வரைபடங்கள் என பல விடயங்கள் கூகிள் எர்த் மூலமாக நாம் பார்வையிடமுடியும் ...சிலர் கூகிள் எர்த்தில் தமது நிறுவனங்கள் ,பிரதேசங்களை பர்வையிடுபவர்களை கவருவதற்கு சில வித்தியாசமான முறைகளையும் கையாளுகின்றார்கள் (மாறுபட்ட கூகிள் எர்த் ) ஆனால் கூகிள் எர்த் நமக்கு காட்ட விரும்பாத பகுதிகளும் உள்ளன ...சில இடங்கள் முற்றாக மறைக்கப்பட்டுள்ளன ..சில இடங்கள் ....குறிப்பிட்ட இடங்களை பற்றிய எந்த விபரங்களையும் கொண்டிருக்காது ..உதாரணம் வட கொரியா....அவ்வாறு கூகிள் நமக்கு காட்ட மறுக்கும் பிராதேசங்கள் இதோ .........
மே தினம் - வரலாறும், வெட்கக்கேடும்.
மே தினம். ‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!’ (workers of all lands unite!) என்ற மார்க்ஸிய எழுச்சிக் குரலின் புரட்சி வடிவம். தொழிலாளர்களின் நலனை கருதாது உழைப்பை மட்டும் முடிந்தளவு உறிஞ்சும் 19ஆம் நூற்றாண்டின் தொழில் புரட்சியின் மோசமான பக்கவிளைவை எதிர்த்து உண்மையிலேயே உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபட்ட, உரிமை தரப்படாதவிடத்து, தாமாகவே எடுத்துக்கொள்ளும் புரட்சியின் செயல்வடிவத்தின் நினைவுநாள்.
Labels:
கட்டுரை
Location:
1, Villahermosa, Tabasco, Mexico
இரண்டாவது உலகயுத்த புகைப்படங்கள்
இரண்டாவது உலக யுத்தத்தில் அதிக மனித இழப்புக்களையும் காயங்களையும் சந்தித்த நாடு ரஷ்யா அண்ணளவாக 21 மில்லியன் மக்கள் வரை பாதிக்கப்பட்டார்கள் ..
இரண்டாம் உலகப்போரின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தான் இவை
உலகப்போரின்போது கைப்பற்றிய பிரதேசங்களை சோவியத் புகைப்படமாக எடுத்தது ஆனால் இவை அவ்வாறு எடுக்கப்பட்டவை அல்ல உலகப்போரில் பங்குபற்றியவர்களின் பேரன் பேத்திகளினால் தமது தளத்தில் வெளியிடப்பட்டவை
'அமைச்சருக்கு எதிரான மன்னார் கத்தோலிக்கர்களின் கண்டனக் கூட்டத்துக்கு அனுமதி'
இலங்கை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் மன்னார் ஆயருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாகக் கூறப்படும் சில கருத்துக்களுக்கு எதிராக மன்னார் கத்தோலிக்கர்களினால் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பிரார்த்தனைக் கூட்டத்துக்கு மன்னார் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. இத்தகைய கூட்டம் ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை உள்ளடக்கியது என்றும் அதனால் பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் ஏற்படலாம் என்று கூறி, அதனைத் தடுக்குமாறு மன்னார் பொலிஸார் நீதிமன்றத்தை அணுகியிருந்தார்கள்.தமிழரசுக்கட்சி மகாநாட்டுக்கு யாழிலிருந்து சென்ற வாகனம் விபத்து- சிவிகே சிவஞானம் காயம்!
சி.வி.கே சிவஞானம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று சென்றுள்ளார். முச்சக்கர வண்டியுடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது. முச்சக்கர வண்டியில் பயணம் செய்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
யாழ். இந்திய துணைத்தூதுவராலய கலாசார உத்தியோகஸ்தரின் மகன் கடத்தப்பட்டு விடுதலை.
தனது மகன் நேற்று வெள்ளிக்கிழமை வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை யாழ்.நல்லூர் பகுதியில் வைத்து மீட்கப்பட்டதாக யாழ். இந்தியத் துணைத் தூதுவராலயத்தின் கலாசார உத்தியோகத்தரான பிரபாகரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
ஊர்வலங்களில்.. இஸ்லாம்..
முஹர்ரம் மாத்ததின் 10 நாள்ஆஸூரா நாள் என்று என்று அழைக்கப்படுகிற்து.
ஆஸூரா என்றால் பத்தாவது என்று பொருள். அணைத்து வகை பத்தாவதுகளையும் அது குறிக்கும். 10 வது குழந்தையை ஆஸூரா என்று சொல்லலாம் என்றாலும் முஸ்லிம்களின் வழக்கத்தில் ஆஸூரா என்றால் அது முஹர்ரம் 10 ம் நாளையே பிரதானமாக குறிக்கும்.
இனப்பிரச்சினைக்காக வழங்கப்படுகின்ற தீர்வு - பொன்சேகா என்ன சொல்கிறார்?
அத்துடன் வடக்கில் மிதமிஞ்சிய இராணுவத்தினர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் வடக்கை சிவில் நிர் வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
படையினருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது - இராணுவம்
படையினருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளதாக இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இலங்கை இராணுவத்தினரின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் மற்றுமொரு முயற்சியாக இந்த அறிக்கையை நோக்குவதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
சனி, ஞாயிறு தினங்களில் இனிமேல் நீதிமன்றம்!!
அமெரிக்க அணு விசை நீர்மூழ்கி கப்பலில் பயங்கர தீ விபத்து
எகிப்து அதிபர் தேர்தல்: இஃவான் வேட்பாளர் முர்ஸி முன்னணி!
சவூதியில் இந்திய அதிகாரிகள் கைது செய்த பீகார் முஸ்லிம் எஞ்சீனியரின் கதி என்ன?
Wednesday, May 23, 2012
சமூகத்தீமைகளுக்கு எதிரான மக்கள் பிரகடனம்
எமது தேசத்தில் கடந்த 3 தசாப்தங்களாக நிலவிய யுத்தம் தற்போது நிறைவடைந்து அமைதியான சூழல் உருவாகிக்கொண்டிருக்கின்றது. இந்த யுத்தமற்ற அமைதியான சூழலைப்பயன்படுத்தி எமது தேசத்தின் இனத்துவங்களிடையே நல்லிணக்கமும், பரஸ்பர புரிந்துணர்வும், கௌரவமான வாழ்வும் உருவாக்கப்படவேண்டும்.
Tuesday, May 22, 2012
காரை நகர் விவகாரமும் முஸ்லிம் ஊடகங்களும்..
முஸ்லிம் ஊடகங்கள் மேற்படி செய்தியை வெளியிட்ட விதம் தொடர்பாக நாம் சில வார்த்தைகளை பேச விரும்புகிறோம். யாழ்ப்பாணத்தில் வாழும் முஸ்லிம்களால் யாழ்ப்பாணத்தில் வைத்து எந்த ஒரு ஊடகமும் செயற்படுத்தப்படுவதில்லை என்பது உறுதி. இதை எழுதும் வரையும் எமக்கு தெரிந்த வரையும்.
Sunday, May 20, 2012
முஸ்லிம் இரும்பு வியாபாரிகள் கைதானது பற்றிய பார்வை
மேற்படி செயலின் உண்மைதன்மை, அதன் காரண காரிய விடயங்கள் தொடர்பாக எதிர் வரும் காலங்களில் நீதிமன்றமே சரியான விவரத்தை வெளிப்படுத்தும். ஆனால் இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளதாகவே பரவலாக செய்திகள் வெளிவந்தவாறு உள்ளன.
லெபனான் எல்லையிலும் சுவரைக் கட்டும் இஸ்ரேல்!
லெபனானில் இருந்து இஸ்ரேல் எல்லை நகரங்களை நோக்கி நடத்தப்படும் ராக்கெட் தாக்குதல்களை தடுக்கவும், மோதலை தவிர்க்கவும் சுவரை கட்டுவதாக இஸ்ரேல் கூறுகிறது. 2 கி.மீ தூரத்திற்கு கட்டப்படும் இச்சுவருக்கு 10 மீட்டர் உயரமாகும். லெபனான் எல்லையையொட்டிய இஸ்ரேல் நகரமான மெதுல்லாவில் குடியிருப்பு மையங்களை பாதுகாக்க சுவர் கட்டப்படும் என்று கடந்த ஜனவரி மாதம் இஸ்ரேல் அறிவித்தது.
சிறையில் அடைக்கலாம்! ஆனால் எனது மன உறுதியை தகர்க்க முடியாது -அப்துல் நாஸர் மஃதனி!
பெங்களூர்:’கோயம்புத்தூரில் என்னை சதிவலையில் சிக்கவைத்தார்கள். இறைவனின் கிருபையால் நான் அந்த வலைப் பின்னல்களை முறியடித்து வெளியே வந்தேன். பெங்களூரில் ஒன்றரை வருடமாக திட்டமிட்டு பின்னப்பட்ட வலையில் என்னை சிக்கவைத்தார்கள். எனக்கு எதிராக அவர்கள் தயார் செய்தது பொய் சாட்சிகளும், போலியான ஆதாரங்களுமாகும்.
நீதிமன்றம் நீதியுடன் நடந்துகொண்டால் கட்டுக் கதைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக சின்னாப் பின்னமாகிவிடும். சி.ஆர்.பி.சி 164-வது பிரிவின்படி ஒரு சாட்சியிடம் 3 முறை வாக்குமூலம் பெற்றுள்ளார்கள். ஆனால், அவர் 3-வது தடவைதான் எனது பெயரை கூறினார். இவ்வாறு அரசு தரப்பு வழக்கை ஜோடித்துள்ளது’-கர்நாடகா மாநிலம் பரப்பனா அக்ரஹார சிறையில் மனித உரிமை ஆர்வலர் என்.எம்.சித்தீக்குடன் நடத்திய நேர்முகத்தில் அப்துல் நாஸர் மஃதனி இவ்வாறு கூறியுள்ளார்.
ஆப்கானில் இவ்வாண்டு பிரெஞ்சு படை வாபஸ்!
வாஷிங்டன்:முன்னரே திட்டமிட்டபடி ஆப்கானில் இருந்து அனைத்து பிரெஞ்சு ராணுவத்தினரும் இவ்வாண்டு இறுதியில் வாபஸ் பெறுவார்கள் என்று பிரான்சின் புதிய அதிபர் ஃபிரான்சுவா ஹாலந்த் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெறும் ஜி-8 உச்சிமாநாட்டில் பங்கேற்க வந்த ஹாலந்த், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது ராணுவத்தினரை வாபஸ் பெறும் முந்தைய தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார்.
Wednesday, May 16, 2012
வடக்கு முஸ்லிம்கள் பற்றிய அஸ்வரின் வாக்குமூலம்
கெளரவ தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே, எமது அன்புக்குரிய நண்பர் Senior Memberமாவை சேனாதிராஜா அவர்கள் இச்சபையில் முன்வைத்துள்ள பிரேரணையின் ஆரம்பத்திலே, “சொல்லப்பட்ட ஆயுதப் போராட்டம் நடைபெற்ற பொழுது” எனக் குறிப்பிட்டார். அவர்கள் ஆயுதப்போராட்டம் நடைபெற்றது. தாம் ஆயுதம் தூக்கி னார்கள் என்பதை ஒத்துக்கொண்டிருக்கின்றார்கள். அத்துடன் “ஆயிரக்கணக் கான தமிழர்களும் ஏனையவர்களும் வடக்குக்,கிழக்கிலுள்ள தமது வதி விடங்களிலிருந்து இடம் பெயர்ந்துள் ளார்கள்” எனக் குறிப்பிட்டார்.
“ஏனையவர்கள்” என்று யாரைக் குறிப்பிட்டீர்கள்? அவர்கள் ஆந்திரப் பிரதேசத்தவர்களா,கன்னடப் பிரதேசத்தவர்களா? ஏன் உங்களுக்கு “முஸ்லிம்கள்” எனக் குறிப்பிடுவதற் குக் கூச்சம்?என்று நான் கேட்க விரும்புகின்றேன். 20 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கிருந்து எழுபத்தை யாயிரம்முஸ்லிம்கள் விரட்டப்பட்டார்கள்.
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன இலாபம்?
அந்த கட்டடத்தில் தான் அசம்பாவிதம் நடந்துள்ளது. வாக்குவாதம் வன்முறையாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கும் அளவிற்கு நிலைமைகள் உருவாகியுள்ளன. பிரச்சனைக்கு அடிப்படை காரணம் யாருக்கு கட்டடத்தை நிர்வகிக்கும் உரிமையுள்ளது என்பதே.
Sunday, May 13, 2012
இனியாவது சிந்திப்போமா?
“யாழ் முஸ்லிம்” இணைய தளத்தில் (http://www.jaffnamuslim.com/2012/05/blog-post_8907.html ) வெளியாயகிய “யாழ்ப்பாணத்தில் காணிகள் விற்பனைக்கு (முழு இணைப்பு)” என்ற பதிவு பற்றி பேச வேண்டியுள்ளது. யாழ் முஸ்லிம் இணையம் அதனை என்ன நோக்கத்தின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது என்பதனை நாம் அறியோம்.ஆனால் அதில் சில பிரச்சனைகள் உருவாவதற்கான ஒரு நிலை தோன்றியுள்ளதையிட்டு கவலையடைகின்றோம்.
யாழ்ப்பாண முஸ்லிம்களின் காணி விற்பனை தொடர்பான விலை பட்டியல் எவ்வாறு இணையங்களின் கைககளிற்கு சென்றது?. இதை அனுப்பி வைத்தவர் யார் என்பதும் எமக்கு தெரியும்.
யாழ் சம்மேளனம் தரகர்களுடன் பேசிய கூட்டத்தில் ஒரு பிரபல தரகரால் தரப்பட்ட காணி விற்பனை விபர பட்டியலே இன்று இவ்வாறு பிரசுரமாகியுள்ளது. தரகர்களை விற்காதீர்கள் என நாம் தடுத்து விட்டு காணியின் முழு விபரங்களையும் தேர்வு செய்து, தெரிந்தெடுத்து வாங்க நாம் பட்டியல் சமர்ப்பிப்பது எந்த விதத்தில் விவேகமானது சரியானது?
யாழ் முஸ்லிம்களே உங்களுடன்.................
22 வருடங்களிற்கு முன்பு தேன் கூடு போல் வாழ்ந்த எம் சமூகம், இனச்சுத்திகரிப்பின் பின்னர் உள்நாடென்றும், வெளிநாடென்றும் சிதறிய நெல்லிக்கனிகள் போல் வாழ்ந்து வருகிறோம். எம் வாழ்வில் மட்டுமல்லாமல் எம் உள்ளத்தாலும் நாம் பலவாறு பிரிந்து நிற்கிறோம்.
எம் சிதறிய சிந்தனைகளையும், செயற்பாடுகளையும் யாழ் முஸ்லிம் ஜமாஅத் என்ற வகையில் நாம் ஒரு சமூகமாக ஒன்றிணைய வேண்டிய அல்லது ஒன்றிணைக்க வேண்டிய அவசியமும் அவசரமும் இன்று எம் முன்னால் உள்ளது.
எம்மிடம் பலதரப்பட்ட சித்தாந்தங்கள், கொள்கைகள், கோட்பாடுகள், வேறுபட்ட தஃவா அணிகள், அரசியல் அணிகள் என்ற பிரிவிணைகளிற்கும் அப்பால் நாம் யாழ் முஸ்லிம் சமூகம் என்ற வகையில் ஒன்றிணைந்து செய்ய வேண்டிய பிரதானமான கடமைகள் நம் முன் உள்ளன.
Subscribe to:
Posts (Atom)