Saturday, September 29, 2012

அன்புடன் எம்மண்ணின் உறவுகளே,யாழ், முஸ்லிம்  சமூகத்திற்குள் ஆயிரம் முரண்பாடுகள் இருக்கலாம், அல்லது  இருக்கின்றது  என்பது ஒரு கசப்பான உண்மையே. அரசியல்  ரீதியான, இஸ்லாமிய அமைப்புக்கள் ரீதியான, மற்றும் பல கொள்கைகள்  ரீதியான வேறுபாடுகள் நம்மை முரண்படவைத்துள்ளன. ஆனால் இவவேறுபாடுகளுக்கும் அப்பால் நம்மையேல்லாம் யாழ் முஸ்லிம்  என்னும் ஒரு சகோதர உறவு ,ஒரு சமூகஉறவு நம் உள்ளங்களை ஏதோ ஒரு உணர்வோடு நாடுகின்றது,அல்லது தேடுகின்றது அப்படியானால் நாம் ஏன் இந்த முரண்படுகளுக்கப்பால் ஒரு சில செயற்திட்டங்களுக்காக ஒற்றுமைப்படக்கூடாது. ஒருவருக்கொருவர் சந்தேகமும், இவர் இதைச்செய்வதா என்ற உளப்பாங்கும் நமது  சமுதாயத்தை சீரழிக்கின்றது. என்பதை உணருங்கள்.