Pages

Saturday, September 29, 2012

அன்புடன் எம்மண்ணின் உறவுகளே,யாழ், முஸ்லிம்  சமூகத்திற்குள் ஆயிரம் முரண்பாடுகள் இருக்கலாம், அல்லது  இருக்கின்றது  என்பது ஒரு கசப்பான உண்மையே. அரசியல்  ரீதியான, இஸ்லாமிய அமைப்புக்கள் ரீதியான, மற்றும் பல கொள்கைகள்  ரீதியான வேறுபாடுகள் நம்மை முரண்படவைத்துள்ளன. ஆனால் இவவேறுபாடுகளுக்கும் அப்பால் நம்மையேல்லாம் யாழ் முஸ்லிம்  என்னும் ஒரு சகோதர உறவு ,ஒரு சமூகஉறவு நம் உள்ளங்களை ஏதோ ஒரு உணர்வோடு நாடுகின்றது,அல்லது தேடுகின்றது அப்படியானால் நாம் ஏன் இந்த முரண்படுகளுக்கப்பால் ஒரு சில செயற்திட்டங்களுக்காக ஒற்றுமைப்படக்கூடாது. ஒருவருக்கொருவர் சந்தேகமும், இவர் இதைச்செய்வதா என்ற உளப்பாங்கும் நமது  சமுதாயத்தை சீரழிக்கின்றது. என்பதை உணருங்கள்.

Thursday, May 31, 2012

யாழ் முஸ்லிம் இணையத்தளத்தின் மகத்தான பணி...!

எமது சகோதர இணையத்தளமான “யாழ் முஸ்லிம்” நடாத்தும் கவிதை தொகுப்புக்களின் வெளியீட்டு விழாவையெண்ணி பெருமகிழ்ச்சி அடைகின்றோம். யாழ்ப்பாண முஸ்லிம்கள், தமிழ்ர் விடுதலை போராட்டத்தின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமான விடுதலை(?) புலிகளினால் பலவந்தமாக துப்பாக்கி முனைகளில் இரு மணித்தியாலங்களினுல் வெளியேற்றப்பட்ட சம்பவம் தான் “ வடக்கின் துயரம் ”. 

விடுதலை என்ற பெயரில் அடுத்த சிறுபான்மையை இனசுத்திகரிப்பு செய்த கொடிய வரலாற்று நிகழ்வை ஒரு ஆவணமாக காண்பதையிட்டு உவகையடைகின்றோம். அப்துல் ரஹீம், ஹஸ்புல்லாஹ், மொஹிதீன் போன்றவர்கள் இதனை அச்சாக கொண்டு வந்த போதிலும் அவற்றிற்கான முகவரியும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை. அல்லது கிடைக்காமலாக்கப்பட்டது. 

இப்போது அந்த  தடைகளையெல்லாம் தாண்டி அந்த அகதி மண்ணின் மைந்தர்களினாலேயே அவை ஆவணமயப்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் இலக்கிய ஆவணமாக. இந்த மகத்தான பணியை செய்த யாழ் முஸ்லிம் இணையத்தளத்திற்கு இந்த வேளையில் நாம் நன்றி கூறுகின்றோம். அவர்களின் முயற்ச்சி முழுதாக வெற்றிபெற நாம் அந்த கவிதை புத்தகத்தை வாங்கி படித்து, பிறரிற்கும் கொடுத்துதவ வேண்டுமென்று ஆசைப்படுகின்றோம். நன்றி.


Saturday, May 26, 2012

கூகிள் எர்த் நமக்கு காட்ட மறுக்கும் பிரதேசங்கள்

கூகிள் எர்த் மூலம் நாம் உலகின் எந்தப்பகுதியையும் பார்க்கமுடியும் ..நாடுகள்,நகரங்களில் உள்ள வைத்திய சாலைகள் ,நூலகங்கள் ,போலீஸ்நிலையம் ,வீதிகளின் வரைபடங்கள் என பல விடயங்கள் கூகிள் எர்த் மூலமாக நாம் பார்வையிடமுடியும் ...சிலர் கூகிள் எர்த்தில் தமது நிறுவனங்கள் ,பிரதேசங்களை  பர்வையிடுபவர்களை கவருவதற்கு சில வித்தியாசமான முறைகளையும் கையாளுகின்றார்கள் (மாறுபட்ட  கூகிள் எர்த் ) ஆனால் கூகிள் எர்த் நமக்கு காட்ட விரும்பாத பகுதிகளும் உள்ளன ...சில இடங்கள் முற்றாக மறைக்கப்பட்டுள்ளன ..சில இடங்கள் ....குறிப்பிட்ட இடங்களை பற்றிய எந்த விபரங்களையும் கொண்டிருக்காது ..உதாரணம் வட கொரியா....அவ்வாறு கூகிள் நமக்கு காட்ட மறுக்கும் பிராதேசங்கள் இதோ .........

மே தினம் - வரலாறும், வெட்கக்கேடும்.


மே தினம். உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!’ (workers of all lands unite!) என்ற மார்க்ஸிய எழுச்சிக் குரலின் புரட்சி வடிவம். தொழிலாளர்களின் நலனை கருதாது உழைப்பை மட்டும் முடிந்தளவு உறிஞ்சும் 19ஆம் நூற்றாண்டின் தொழில் புரட்சியின் மோசமான பக்கவிளைவை எதிர்த்து உண்மையிலேயே உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபட்ட, உரிமை தரப்படாதவிடத்து, தாமாகவே எடுத்துக்கொள்ளும் புரட்சியின் செயல்வடிவத்தின் நினைவுநாள்.

இரண்டாவது உலகயுத்த புகைப்படங்கள்


இரண்டாவது உலக யுத்தத்தில் அதிக மனித இழப்புக்களையும் காயங்களையும் சந்தித்த நாடு ரஷ்யா அண்ணளவாக   21 மில்லியன் மக்கள் வரை பாதிக்கப்பட்டார்கள் ..
இரண்டாம் உலகப்போரின்போது  எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தான் இவை 
உலகப்போரின்போது கைப்பற்றிய பிரதேசங்களை சோவியத் புகைப்படமாக எடுத்தது ஆனால் இவை அவ்வாறு எடுக்கப்பட்டவை அல்ல உலகப்போரில் பங்குபற்றியவர்களின் பேரன் பேத்திகளினால் தமது தளத்தில் வெளியிடப்பட்டவை 

ப்ரூஸ்லீயின் அரிய புகைப்படங்கள்


சிலரின் பெயர்கள் எம்மத்தியில் நிரந்தர இடத்தை பெற்றுள்ளன சில செயல்களுக்கு சிலரின் பெயர்களை வைத்துள்ளோம் அப்படியானவற்றிற்கு உதாரணம்தான் ப்ரூஸ்லீ முரட்டுத்தனமாக நடக்கும் ஒருவனை பார்த்து நாம் ஆமா உனக்கு ப்ரூஸ் லீ எண்ட நினைப்பு இந்த வார்த்தை உடனேயே வந்துவிடும் 1940 இல் அமெரிக்காவில் பிறந்தவர் ப்ரூஸ்லீ மூன்று வயதில் ஹாங்ஹங் இற்கு இடம்பெயர்ந்து விட்டார் இன்று சீனாவை சேர்ந்த ஒருவர் ஏனோ தானோ என்று கலை தூக்கினால் நிச்சயம் பயம் வரும்

தெஹிவலை மஸ்ஜித் - அட்டகாச ஆமத்துருக்களின் அணிவகுப்பு!

தெஹிவலை மிருககாட்சிசாலைக்கு அருகில் அமைந்துள்ள குர்ஆன் சுன்னாஹ் அடிப்டையில் இயங்கும் மஸ்ஜிதை இல்லாதொழிக்க இனவாத சக்திகள் நேற்றைய தினம் ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை ஒழுங்கு செய்திருந்தன. அவற்றின் வீடியோ காட்சி வடிவம் கீழை தரப்பட்டுள்ளது.

தெஹிவளை தாருர் ரஹ்மான் தொடர்பான இரு தரப்பு கூட்டம் நாளை


 தெஹிவளை பிரதேச தாருர் ரஹ்மான் மஸ்ஜித் , சிறுவர் மதரஸா தொடர்பாக முஸ்லிம் தரப்புக்கும், ஆர்பாட்டகாரர்கள் தரப்புக்கும் இடையில் நாளை பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டம் ஒன்று தெஹிவளை ஜெயசிங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது என அதன் பிரதான நிர்வாகி தெரிவித்தார்.

ஜனாஸா அறிவிப்பு

யாழ்ப்பாணம் சோனக தெருவை பிறப்பிடமாக கொண்ட ஷாஹுல் ஹமீத் அவர்கள் (லெப்பை குட்டி) அவர்கள் இன்று ஞாயிற்றுகிழமை பகல் பேருவலையில் மரணமானார். 

அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் நாளை காலை பேருவளை மையவாடியில் அடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் அறியத்தந்துள்ளனர். 

'அமைச்சருக்கு எதிரான மன்னார் கத்தோலிக்கர்களின் கண்டனக் கூட்டத்துக்கு அனுமதி'

இலங்கை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் மன்னார் ஆயருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாகக் கூறப்படும் சில கருத்துக்களுக்கு எதிராக மன்னார் கத்தோலிக்கர்களினால் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பிரார்த்தனைக் கூட்டத்துக்கு மன்னார் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. இத்தகைய கூட்டம் ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை உள்ளடக்கியது என்றும் அதனால் பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் ஏற்படலாம் என்று கூறி, அதனைத் தடுக்குமாறு மன்னார் பொலிஸார் நீதிமன்றத்தை அணுகியிருந்தார்கள்.

பொன்சேகா விடுதலையான விதம்: ஜேவிபி அதிருப்தி


கடந்த நாடாளுமன்றத்தில் ஜேவிபி சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியில் போட்டியிட்டதுகடந்த ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை வேட்பாளராக நிறுத்தி ஜனநாயக தேசிய முன்னணி என்ற கூட்டணியில் பங்கெடுத்த மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டிருக்கின்ற விதம் குறித்து அதிருப்தி வெளியிட்டிருக்கிறது.

தமிழரசுக்கட்சி மகாநாட்டுக்கு யாழிலிருந்து சென்ற வாகனம் விபத்து- சிவிகே சிவஞானம் காயம்!


தமிழரசுக்கட்சி மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்தி லிருந்து சென்ற வான் ஒன்று வாழைச்சேனையில் விபத்து க்குள்ளானது. இதில் பயணம் செய்த யாழ். மாநகரசபை முன்னாள் ஆணையாளரும், யாழ். மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் உட்பட சிலர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது
சி.வி.கே சிவஞானம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று சென்றுள்ளார். முச்சக்கர வண்டியுடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது. முச்சக்கர வண்டியில் பயணம் செய்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

யாழ். இந்திய துணைத்தூதுவராலய கலாசார உத்தியோகஸ்தரின் மகன் கடத்தப்பட்டு விடுதலை.

தனது மகன் நேற்று வெள்ளிக்கிழமை வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை யாழ்.நல்லூர் பகுதியில் வைத்து மீட்கப்பட்டதாக யாழ். இந்தியத் துணைத் தூதுவராலயத்தின் கலாசார உத்தியோகத்தரான பிரபாகரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஊர்வலங்களில்.. இஸ்லாம்..


முஹர்ரம் மாத்ததின் 10 நாள்ஆஸூரா நாள் என்று என்று அழைக்கப்படுகிற்து.

ஆஸூரா என்றால் பத்தாவது என்று பொருள். அணைத்து வகை பத்தாவதுகளையும் அது குறிக்கும். 10 வது குழந்தையை ஆஸூரா என்று சொல்லலாம் என்றாலும் முஸ்லிம்களின் வழக்கத்தில் ஆஸூரா என்றால் அது முஹர்ரம் 10 ம் நாளையே பிரதானமாக குறிக்கும்.

இனப்பிரச்சினைக்காக வழங்கப்படுகின்ற தீர்வு - பொன்சேகா என்ன சொல்கிறார்?


இனப்பிரச்சினைக்காக வழங்கப்படுகின்ற தீர்வு ஏட்டில் மட்டுமே இருக்கக்கூடாது - சரத் பொன்சேக்காஇனப்பிரச்சினைக்காகன தீர்வை எழுத்து மூலம் வைத்துக்கொண்டு சர்வதேசத்தையும் மக்களையும் ஏமாற்றக் கூடாது எனவும் நிதானமாக சிந்தித்து, நடைமுறைக்கு சாத்தியமான தீர்வை கட்டாயமாக முன்வைக்க வேண்டும் எனவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
 அத்துடன் வடக்கில் மிதமிஞ்சிய இராணுவத்தினர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் வடக்கை சிவில் நிர் வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

படையினருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது - இராணுவம்

படையினருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது - இராணுவம்
படையினருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளதாக இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
 இலங்கை இராணுவத்தினரின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் மற்றுமொரு முயற்சியாக இந்த அறிக்கையை நோக்குவதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

சனி, ஞாயிறு தினங்களில் இனிமேல் நீதிமன்றம்!!

நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு துரிதமாக தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் சனி மற்றும் ஞாயிறு தினங்களிலும் நீதிமன்றங்களைத் திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுமார் 8 இலட்சம் வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடப்பதாக நீதியமைச்சர் அதாவுட செனவிரட்ன தெரிவித்துள்ளார். வழக்குகளை விசாரிப்பதில் தாமதம் நிலவுவதால் மனுதாரர்களும் பிரதிவாதிகளும் பாரிய சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். ஒத்திவைக்கப்படும் வழக்குகள் தொடர்பில் ஆராயவும் நீதிமன்றங்களில் விசேட நடவடிக்கையினை பின்பற்றவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலுவை வழக்குகளுக்கு தீர்வுகாண்பதற்காக மேலதிக நீதிமன்றங்களை இரு வருடங்களுக்கு முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க அணு விசை நீர்மூழ்கி கப்பலில் பயங்கர தீ விபத்து


அமெரிக்காவின் மேய்ன் மாகாணத்தில் உள்ள துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அணு விசை நீர்மூழ்கி கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் காயமடைந்தனர்.இந்த விபத்தில் அணு உலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மியாமி கடற்கரைப் பகுதியில் உள்ள போர்ட்ஸ்மெளத் கடற்படைத் துறைமுகத்தில் இந்த அணு விசை நீர்மூழ்கிக் கப்பல் பழுதுபார்க்கும் பணிக்காக நிறுத்தப்பட்டிருந்தது. இதன் திறனை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

எகிப்து அதிபர் தேர்தல்: இஃவான் வேட்பாளர் முர்ஸி முன்னணி!


கெய்ரோ:முப்பது ஆண்டுகள் நீண்ட ஹுஸ்னி முபாரக்கின் ஏகாதிபத்திய ஆட்சிக்கு முடிவுக் கட்டிய மக்கள் புரட்சிக்குப் பிறகு ஜனநாயகத்தை நோக்கி நகரும் எகிப்தில் கடந்த 2 தினங்களாக நடைபெற்று வந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிபர் தேர்தலில் முதல் கட்ட முடிவுகள் இஸ்லாமியவாதிகளான இஃவானுல் முஸ்லிமீனின் வேட்பாளர் டாக்டர் முஹம்மது முர்ஸிக்கு சாதகமாக அமைந்துள்ளன.

சவூதியில் இந்திய அதிகாரிகள் கைது செய்த பீகார் முஸ்லிம் எஞ்சீனியரின் கதி என்ன?


Fasih Mahmoodபுதுடெல்லி:தீவிரவாத தொடர்பு குற்றம் சாட்டி சவூதி அரேபியாவில் இருந்து கைது செய்யப்பட்டார் என இந்திய உளவுத்துறை அதிகாரிகளால் கூறப்படும் பீகார் முஸ்லிம் எஞ்சீனியர் ஃபஸீஹ் மஹ்மூத் என்ன ஆனார் என்பது குறித்து தகவல் எதுவும் இல்லை. இம்மாதம் 13-ஆம் தேதி சவூதி அரேபியாவின் ஜுபைலில் ஒரு வீட்டில் வைத்து சவூதி போலீசும், ஐ.பியும் இணைந்து ஃபஸீஹை விசாரிப்பதற்காக எனக்கூறி கஸ்டடியில் எடுத்தனர்.

Wednesday, May 23, 2012

சமூகத்தீமைகளுக்கு எதிரான மக்கள் பிரகடனம்


by: Azmin Aiyoob     யாழ் முஸ்லிம்களாகிய நாம் இத்தால் சகலருக்கும் அறியத்தருவதாவது,..
எமது தேசத்தில் கடந்த 3 தசாப்தங்களாக நிலவிய யுத்தம் தற்போது நிறைவடைந்து அமைதியான சூழல் உருவாகிக்கொண்டிருக்கின்றது. இந்த யுத்தமற்ற அமைதியான சூழலைப்பயன்படுத்தி எமது தேசத்தின் இனத்துவங்களிடையே நல்லிணக்கமும், பரஸ்பர புரிந்துணர்வும், கௌரவமான வாழ்வும் உருவாக்கப்படவேண்டும்.

Tuesday, May 22, 2012

காரை நகர் விவகாரமும் முஸ்லிம் ஊடகங்களும்..

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் நடந்த அசம்பாவிதம் தொடர்பாக பல தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக வெளிவந்துள்ளன. இதில் முஸ்லிம் ஊடகங்கள், தமிழ் ஊடகங்கள் என இரு புறத்திலிருந்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர் தமிழ் பெண் என்ற வகையில் தமிழர் தரப்பு ஊடகங்களில் ஒரு கோபம் மிகைத்து நிற்பதை எம்மால் உணர முடிகிறது. இனரீதியான பாதிப்பின் உணர்வுகள், புரிந்து கொள்ள தக்கவையே.

முஸ்லிம் ஊடகங்கள் மேற்படி செய்தியை வெளியிட்ட விதம் தொடர்பாக நாம் சில வார்த்தைகளை பேச விரும்புகிறோம். யாழ்ப்பாணத்தில் வாழும் முஸ்லிம்களால் யாழ்ப்பாணத்தில் வைத்து எந்த ஒரு ஊடகமும் செயற்படுத்தப்படுவதில்லை என்பது உறுதி. இதை எழுதும் வரையும் எமக்கு தெரிந்த வரையும்.

Sunday, May 20, 2012

முஸ்லிம் இரும்பு வியாபாரிகள் கைதானது பற்றிய பார்வை

காரை நகரில் நடந்த சம்பவம் தொடர்பில் தமிழ் இணையங்களும், ஏனைய ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. இரு முஸ்லிம் இளைஞர்கள் வலது குறைந்த இளம் பெண்ணை பாலியல் வன்புணற்ச்சிக்கு உட்படுத்த முயன்ற செயல் தொடர்பாகவும், தப்பியோடிய அவர்களை இன்று காரைநகர் இளைஞர்கள் மீண்டும் பிடித்து கடுமையாக தாக்கு பொலிஸாரிடம் பாரமளித்ததாகவும் அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.

மேற்படி செயலின் உண்மைதன்மை, அதன் காரண காரிய விடயங்கள் தொடர்பாக எதிர் வரும் காலங்களில் நீதிமன்றமே சரியான விவரத்தை வெளிப்படுத்தும். ஆனால் இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளதாகவே பரவலாக செய்திகள் வெளிவந்தவாறு உள்ளன.

லெபனான் எல்லையிலும் சுவரைக் கட்டும் இஸ்ரேல்!


டெல்அவீவ்:ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் கட்டப்பட்டுள்ள பிரிவினை சுவருக்கு சமமான சுவரை லெபனான் எல்லையிலும் இஸ்ரேல் கட்டத் துவங்கியுள்ளது. லெபனான் ராணுவம் மற்றும் ஐ.நா அமைதிப்படையின் ஆதரவுடன் இச்சுவரை கட்டுவதாக இஸ்ரேல் கூறுகிறது.
லெபனானில் இருந்து இஸ்ரேல் எல்லை நகரங்களை நோக்கி நடத்தப்படும் ராக்கெட் தாக்குதல்களை தடுக்கவும், மோதலை தவிர்க்கவும் சுவரை கட்டுவதாக இஸ்ரேல் கூறுகிறது. 2 கி.மீ தூரத்திற்கு கட்டப்படும் இச்சுவருக்கு 10 மீட்டர் உயரமாகும். லெபனான் எல்லையையொட்டிய இஸ்ரேல் நகரமான மெதுல்லாவில் குடியிருப்பு மையங்களை பாதுகாக்க சுவர் கட்டப்படும் என்று கடந்த ஜனவரி மாதம் இஸ்ரேல் அறிவித்தது.

சிறையில் அடைக்கலாம்! ஆனால் எனது மன உறுதியை தகர்க்க முடியாது -அப்துல் நாஸர் மஃதனி!


பெங்களூர்:’கோயம்புத்தூரில் என்னை சதிவலையில் சிக்கவைத்தார்கள். இறைவனின் கிருபையால் நான் அந்த வலைப் பின்னல்களை முறியடித்து வெளியே வந்தேன். பெங்களூரில் ஒன்றரை வருடமாக திட்டமிட்டு பின்னப்பட்ட வலையில் என்னை சிக்கவைத்தார்கள். எனக்கு எதிராக அவர்கள் தயார் செய்தது பொய் சாட்சிகளும், போலியான ஆதாரங்களுமாகும்.
நீதிமன்றம் நீதியுடன் நடந்துகொண்டால் கட்டுக் கதைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக சின்னாப் பின்னமாகிவிடும். சி.ஆர்.பி.சி 164-வது பிரிவின்படி ஒரு சாட்சியிடம் 3 முறை வாக்குமூலம் பெற்றுள்ளார்கள். ஆனால், அவர் 3-வது தடவைதான் எனது பெயரை கூறினார். இவ்வாறு அரசு தரப்பு வழக்கை ஜோடித்துள்ளது’-கர்நாடகா மாநிலம் பரப்பனா அக்ரஹார சிறையில் மனித உரிமை ஆர்வலர் என்.எம்.சித்தீக்குடன் நடத்திய நேர்முகத்தில் அப்துல் நாஸர் மஃதனி இவ்வாறு கூறியுள்ளார்.